Ad Code

அடடா.,இது நல்லாருக்கே...இந்த வழிமுறைகளை எல்லாம் கடைபிடிச்சா...இயற்கையாகவே அழகை பெறமுடியுமா?

அழகு என்பது வெறும் தோற்றமல்ல, அது உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு. இன்று பலரும் காஸ்மெட்டிக்ஸ், க்ரீம், செயற்கை சிகிச்சைகள் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து இயற்கையான அழகை மறந்துவிடுகிறார்கள். ஆனால் உண்மையான அழகு இயற்கையிலேயே இருக்கிறது. இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தால், உங்கள் தோல் பிரகாசமாக, தலைமுடி சுறுசுறுப்பாக, உடல் ஆரோக்கியமாக, மனம் அமைதியாக இருக்கும்.




இயற்கையான அழகை பெற வேண்டுமென்றால், நம் பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வது மிக முக்கியம். உணவு, நீர், தூக்கம், மனநிலைகள், உடற்பயிற்சி ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இவற்றை சரிசெய்தாலே இயற்கையான அழகு தானாகவே உங்களுக்கு வந்து சேரும்.


அதற்காக கடைபிடிக்க வேண்டிய சில எளிய, ஆனால் மிக பயனுள்ள வழிமுறைகள் குறித்து விரிவாக இங்கே காண்போம். இவை உங்கள் வாழ்க்கை முறையை சிறிது சிறிதாக மாற்றி, உங்களுக்கே தெரியாமல் அழகையும், ஆரோக்கியத்தையும் கொண்டுவரும்.

முக பராமரிப்பு: 




தினமும் இரண்டு முறை முகத்தை சுத்தமான நீரால் அல்லது மென்மையான கிளென்சர் கொண்டு கழுவி தூசி, எண்ணெய், மாசுகளை அகற்ற வேண்டும். இதன் பிறகு தேவைப்பட்டால் டோனர் பயன்படுத்தி முகத்தின் துவாரங்களை (pores) சுருங்கச் செய்யலாம். தினசரி ஈரப்பசை (moisturizer) பயன்படுத்தி தோலை ஈரமாக வைத்துக்கொள்வதும் மிக முக்கியம். கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்புக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை இயற்கை ஸ்க்ரப் அல்லது முகமூடி போட்டு இறந்த செல்களை நீக்கலாம். இவ்வாறு முறையாக முகத்தை பராமரிப்பது நீண்டகால அழகையும், இளமையும் தரும்.

தலைமுடி பராமரிப்பு:




தலைமுடி ஆரோக்கியமாக இருக்க, முதலில் முடியை  சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினசரி காற்று, தூசி, மாசு ஆகியவை தலைமுடியில் சேர்ந்து அங்கு எண்ணெய் மற்றும் அழுக்கு சேருவதால் முடி மோசமாகிறது. இதை தவிர்க்க வாரத்தில் குறைந்தது இருமுறை மூலிகை திரவியங்களால் தயாரான ஸாம்பவுடர்  அல்லது இயற்கை சாம்பூ கொண்டு தலை கழுவ வேண்டும். கற்றாழை,தேங்காய் எண்ணெய்,  செம்பருத்திப்பூ, வேப்பஇலை மற்றும்  கருவேப்பிலை ஆகிய மூலிகைகள் போட்ட எண்ணெய் தடவுவது முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. இவை முடியை வலுப்படுத்தி, முடி உதிர்வதை குறைத்து நீளமாகவும் மெருகாகவும் வளரச் செய்கின்றன. மேலும் உணவில் புரதம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியான தலைமுடி பராமரிப்பு இயற்கையான அழகை உருவாக்கி நீண்ட காலம் பராமரிக்க உதவும்.

அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி:




இயற்கையாக  அழகு பராமரிக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம்.  தினசரி உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு தோலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் சரியாக சென்று சேரும். இதனால் தோல் பளபளப்பாகவும் இளமையாகவும் காட்சியளிக்கிறது. நுரையீரல் செயல்பாடு அதிகரிப்பதால் உடல் உள்ளே இருந்து சுத்தமாகி, பிம்புகள் மற்றும் முகப்பருக்கள் குறையும். மேலும், நன்றாக வியர்த்து வெளியேறும் போது உடலில் இருக்கும் கழிவுகள் நீங்கி, இயற்கையான டிடாக்ஸாக (Detox) செயல்படுகிறது. தொடர்ந்து யோகா அல்லது ப்ராணாயாமா போன்ற பயிற்சிகளை செய்தால் மன அமைதி கிடைத்து அழகு இயற்கையாகவே வெளிப்படும். உடற்பயிற்சி செய்யும் போது உண்டாகும் ஹார்மோன்கள் மனச்சோர்வை நீக்கி முகத்தில் ஓர் உஜாலை தருகின்றன. இதனால் இயற்கையான அழகு நீண்ட காலம் நிலைக்க உதவுகிறது.


உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துதல்:   




இயற்கையான அழகை பராமரிக்க உப்பும் சர்க்கரையும் அளவுக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிக உப்பு உட்கொள்வது உடலில் நீர் தங்கி முகம் வீங்கி காணப்பட வைக்கும், மேலும் தோல் உலர்ச்சி மற்றும் தடித்த தோல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேபோல் அதிக சர்க்கரை உணவு உட்கொள்வது உடலில் உள்ள கொழுப்புகளை அதிகரித்து, ஜீரண சக்தியை பாதித்து முகத்தில் பிம்புகள், பருக்கள், சுருக்கங்கள் விரைவில் தோன்ற வழிவகுக்கும். அதிக சர்க்கரை தோல் செல்களை பழுதுபடுத்தி, முக அழகை கெடுக்கிறது. எனவே இயற்கையான பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்தினால், தோல் சீராக ஜொலிக்கவும், முகம் இளமையாகவும் இருக்கும். இவ்வாறு உணவில் சீராக கட்டுப்பாடு கடைபிடித்தால், உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்து இயற்கையான அழகை நீடிக்கச் செய்யலாம்.

சூரியகதிர் பாதுகாப்பு :




சூரியகதிர்கள் நமக்கு வைட்டமின் டி  போன்ற முக்கிய சத்துகளை தருவதோடு, அதே சமயம் அதீதமாக வெளிச்சத்திற்கு உட்பட்டால் தோலில் கருமை, இளமை குறைதல், சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் இயற்கையான அழகு பராமரிக்க, சூரியகதிர்களின் தீவிர UVA மற்றும் UVB கதிர்களிலிருந்து தோலை பாதுகாக்க வேண்டும். அதிகாலை 7 - 8.30 வரையும் மாலை 4-5.30 இருக்கும் சூரியகதிர் உடல் மற்றும் முக பாதுகாப்பிற்கு மிக நல்லது. மற்ற நேரத்தில் இருக்கும் சூரியக் கதிரின் தாக்கத்தில் இருந்து நம்மைநாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.வெளியே செல்லும் போது விரைவில் ஊடுருவாத துணி, ஹாட், கூல் கிளாஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி பாதுகாக்கலாம். இயற்கை  பொருளான  தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலோவேரா ஜெல் போன்றவை தோலில் தடவினால் அது ஓர் இயற்கை தடுப்பாக செயல்படும்.இவ்வாறு சூரியகதிர் தாக்கத்தை குறைத்து பராமரிக்கிற பழக்கம் நீண்ட நாள் இயற்கை அழகை தக்கவைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

உணவு பழக்கவழக்கத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்:




நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மனநலத்தையும் மேம்படுத்துவதற்கு உணவுப் பழக்கவழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணவு பழக்கம்  காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், புரதம் அதிகம் உள்ள பருப்பு மற்றும் மசாலா வகைகள் ஆகியவற்றை சமமாகக் கொண்டுள்ள உணவைக் குறிக்கும். அதே நேரத்தில் எண்ணெய், உப்பு, சர்க்கரை அதிகம் உள்ள ஜங்க் உணவுகளை தவிர்த்து, இயற்கைச் சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் சரியான நேரத்தில் காலை, மதியம், இரவு உணவை தவறாமல் எடுத்துக்கொள்வது ஜீரணத்தை சீராக்கி உடலை சக்திவாய்ந்ததாக வைக்கிறது. அதிகப்படியான உண்ணல், விரைவான உண்ணல் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். உடல் தேவைக்கேற்ப தண்ணீர் பருகி, உணவை மென்று சாப்பிடும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். உணவை சமநிலையாகத் தேர்ந்தெடுத்து சத்துக்கள் குறையாமல் பார்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வின் ரகசியம் ஆகும். இதனால் நீண்ட நாள் நோய்கள் தூரம் நீங்கி, இயல்பான உடல் எடை மற்றும் நல்ல சக்தி நிலையாக இருக்கும்.


மன நிம்மதி மற்றும் ஸ்ட்ரெஸ் குறைப்பு:




அதிக மன அழுத்தம் நேரும்போது உடலில் கார்டிசால் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகரித்து, தோலில் பிம்புகள், சுருக்கங்கள், கருவளையங்கள், முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகின்றன. மன நிம்மதி இல்லாமல் நீண்ட நாட்கள் கழிப்பது தோல் பளபளப்பை குறைத்து, முகம் சோர்வாகவும் பொலிவை  இழந்ததாகவும் இருக்கும். அதனால் தினமும் யோகா, மேடிட்டேசன்  போன்றவை செய்து மனதை சாந்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம். விருப்பமான வேலைகளைச் செய்து மனதை மகிழ்வாக வைத்துக் கொள்ள வேண்டும். சந்தோஷமான உறவுகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். அப்போதுதான் சந்தோசம் நிம்மதியும் நம்முடன் எப்போதும் இருக்கும். மன நிம்மதி கிடைத்தால் அது உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் சீராக வைத்துக் கொண்டு, தோலில் இயற்கையான ஒளியை வெளிப்படுத்த உதவும். 

இயற்கை அழகிற்கு உதவும் குடிநீர்:  




நம் உடலின் சுமார் 70% நீரால் ஆனது என்பதால், தேவையான அளவு தண்ணீர் பருகுவது உடலை உள் இருந்து சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, தோல் மற்றும் தலைமுடிக்கு சுறுசுறுப்பை அளிக்கிறது. நீர் சரிவர கிடைத்தால் முகம் பளிச்சிடும், உலர்ச்சியில்லாத நிலையில் இருக்கும், சுருக்கங்கள் தாமதமாக வரும். கண்களுக்கு உயிரோட்டம் கிடைத்து கருவளையங்கள் குறையும். உடலில் உள்ள நுண்ணுயிரிகள் செயல்பாட்டை தூண்டி, சதை மற்றும் தசைகள் சீராக இருக்கும். குறிப்பாக வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால்  உடலினுள் ஏற்படும் நிறைய பிரச்சனைகள் குறைகின்றனர். இவ்வாறு தண்ணீர் இயற்கையான அழகை அதிகரிக்க உள் இருந்து வேலை செய்வதில் வல்லமை வாய்ந்ததாக உள்ளனர்.


நிம்மதியான நல்ல உறக்கம் தேவை:




இயற்கையான அழகு பராமரிப்பில் உறக்கம் மிகப் பெரியதொன்றாக கருதப்படுகிறது. நம் உடல் உறங்கும் போது தான் சீரமைப்பு, நரம்பு மற்றும் தசை சீரமைப்பு, ஹார்மோன் நிலைத்தன்மை போன்ற முக்கிய செயல்கள் நடைபெறுகின்றன. போதிய உறக்கம் இல்லாமல் இருந்தால் முகத்தில் கருவளையங்கள், சுருக்கங்கள், முகப்பருக்கள் போன்ற தோல் பிரச்சனைகள் விரைவில் தோன்றும். மேலும், முகம் சோர்வாக, பொலிவு  இழந்தது போலவும் தெரியும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் முறையாக உறங்குவது உடலை ரீசார்ஜ் செய்து, தோலை உள் ளிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால் முகம் இயற்கையாக ஜொலிக்கும். தூக்கம் ஆன்டி ஏஜிங் ஹார்மோன்களின் சீரான வெளியீட்டை ஊக்குவித்து, தோலை இளமையாக வைத்திருக்கிறது. நிம்மதியான உறக்கம், இயற்கை அழகை  நீண்ட நாட்கள் நிலைத்திருக்க உதவுகிறது.


மிக விலைமதிப்பான அழகு சாதனங்களும், விரைவான விளைவுகளையும் தரும் சிகிச்சைகளும் சில நேரம் தோற்றத்தை மட்டும் மாற்றக்கூடும். ஆனால் இயற்கையை நண்பராக கொண்டு, அதன் வழிமுறைகளை நம்பிக்கை கொண்டு கடைபிடிக்கும்போது, அது உங்களுக்கு நீடித்த, தீங்கில்லாத, உண்மையான அழகை வழங்கும்.

சரியான உணவு, போதுமான நீர், தூக்கம், மன அமைதி, சூரிய ஒளி, சிறிது உடற்பயிற்சி மற்றும் இயற்கையான பராமரிப்பு ஆகியவை உங்கள் இயற்கையான அழகை பூரணமாக வெளிப்படுத்தும். அவை உங்களை உடலிலும் மனத்திலும் ஆரோக்கியமாக வைத்து, உங்களுக்குள் இருக்கும் இயற்கை பிரகாசத்தை வெளிக்கொண்டு வரும்.




அழகு என்பது புறம் மட்டும் அல்ல, அது உங்களின் ஆரோக்கிய வாழ்வின் பிரதிபலிப்பு. அதற்காக சிறிது பொறுமையுடன், ஒழுங்கான பழக்கங்களுடன் இயற்கையோடு சேர்ந்து வாழுங்கள். இயற்கையின் கைகள் உங்களை அன்புடன் அழகாக்கும்.






Post a Comment

0 Comments