பூண்டு வெங்காய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது சிறந்த அழகு சாதனைப் பொருளாகவும், உணவாகவும், மருந்தாகவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும்.
ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும் கொழுப்பு 0.1 விழுக்காடும் தாதுக்கள் 1.0 விழுக்காடும், நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளனர். பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றனர். பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்துவிடும் காலை பானம்(ஒரு மாதத்தில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எல்லாம் கரைந்து விடும்)
பால் ஒரு டம்ளர் எடுத்துக்கொண்டு அதில் பூண்டு 2 பல் மற்றும் தேன் சிறிதளவு போட்டு காலை விழித்த பிறகு காபிக்கு பதில் இந்த பானத்தை குடிக்கவும். பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.
பூண்டை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் பயன்கள்:
பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட குடலில் குடியிருக்கும் புழுக்களும் ,நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்ப்படியிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். இரத்தக்குழாயில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும்.
0 Comments
Comments