கருமையான சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒரு வித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் வெளியே செல்லும்போது வேண்டாதவர்கள் சிலர் உருவத்தை வைத்து கேலி செய்வது, நண்பர்களுள் நிராகரிக்கபடுவது, உறவினர்களால் கேலிக்கு உண்டாவது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
வீட்டில் இருக்கும் எளிமையான இயற்கை பொருட்களை பயன்படுத்தி ஃபேஷியல் பேக்:
பழத்தை பயன்படுத்தி ஃபேஷியல் செய்யும் முறை:
கரும்புள்ளி மற்றும் பருக்களை மறைக்க பப்பாளி பேஸ்பேக்:
முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராவ்பெர்ரிச் சாறு எடுத்து சில நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கின்ற போது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ் இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.
காய்கறிகளை பயன்படுத்தி ஃபேஷியல் செய்யும் முறை:
முட்டைக்கோஸ் பேஸ் பேக்:
முதலில் சொன்னதுபோல் பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டை கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டை கோஸ் சாற்றை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு முட்டைக் கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும். மேற்சொன்ன இரண்டு ஃபேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கு ஒரு முறையும் செய்து கொள்ளலாம்.
முகம் பொலிவு பெற கடலைமாவு பேஸ் பேக்:
சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலைமாவு, எல்லாவற்றையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.
முகம் வெள்ளையாக வாழைப்பழ பேஸ் பேக்:
நான்கு தடித்த வாழைப்பழத்துடன்(எந்த வாழைப்பழம் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம்) தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக்கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.
குங்குமப்பூ:
குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவை போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும். அது வெது வெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பதுதான் பலன் தரும்.
ஆயுர்வேத கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் மாறும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.
முகம் மற்றும் உடல் முழுவதும் வெள்ளையாக நினைப்பவர்களின் கவனத்திற்கு!
வெயிலில் செல்லும் போது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது. டூ வீலரில் செல்கின்றபோது கைகளுக்குக் கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் பிடிக்காதவர்கள் அவைகளை ஜூஸாசாக குடிக்கலாம்.
0 Comments
Comments